அவள் கடைசியாக கொடுத்த
முத்தத்தில் கொஞ்சம் நிறைய
ஆழமாக ஊடுருவும்
காதல் இருந்தது,
ஆழமாக ஊடுருவும்
கண்களில் கொஞ்சம் நிறைய
இதழின் ஓரத்தில்
கண்ணீர் இருந்தது,
இதழின் ஓரத்தில்
வெடித்துவிட கொஞ்சம் நிறைய
அழுகை இருந்தது,
ஈறு தெரியும் சிரிப்பை
பார்க்க கொஞ்சம் நிறைய
ஆசை இருந்தது.
உள்ளம் உருகும் பாடலொன்று
பாட கொஞ்சம் நிறைய
ஆவல் இருந்தது,
ஊரரிய அவளுடன் ஒன்றாக
சுற்ற கொஞ்சம் நிறய
நெஞ்சம் இருந்தது,
என்னவள் என்னவளென்று கத்தி
கூற கொஞ்சம் நிறைய
மனதும் இருந்தது,
ஏதும் கேட்காமல் வா என்னோடென்று
அழைக்க கொஞ்சம் நிறைய
தைரியம் இருந்தது,
ஒன்றாய் கடைசிவரை சேர்ந்து
வாழ கொஞ்சம் நிறைய
ஊயிர் இருந்தது,
ஓரமாய் இருந்து அவள் வாழ்வதை
காணமட்டுமே கொஞ்சம் நிறைய
வாய்ப்பு இருந்தது,
அஃதே உயிர்மெய் எழுத்துக்களால்
எழுதவே "கொஞ்சமும் நிறைவேறாத"
ஆசை காதல்" மட்டும் இருகிறது...
ரொம்ப நல்ல இருக்கு
ReplyDeleteவாழ்த்துக்கள்......
ReplyDeleteவாழ்த்துக்கள்......
ReplyDeleteவாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.....
ReplyDeleteமூன்று மூன்று வரிகளில்
ReplyDeleteகொஞ்சம் நிறைய
கவிதைகள் இருந்தது
நல்லா இருக்கு பாஸ்
kavithe...kavithe
ReplyDeleteOru kavithaikul...pala kavithe
kannirudan[aananda]
thenmozhi