மழை
மாலை நேரத்தில் பெய்யும்
மழையை நீ
ரசித்திருக்கலாம்,
உண்ண கொஞ்சம் காரம்
சூடான தே-நீர்
படிக்க நல்ல புத்தகம்
என் நினைவுகள்,
இதில் யெதெனும் ஒன்றுடன்....,
அதிகாலை 3 மணிக்கு
பெய்யும் அடை மழையை
ரசித்திருக்கிறாயா?
காதலியை காமுறும்
காதலன் போல்
வானுக்கும் பூமிக்கும்
இடைவெளி இல்லாது....,
நான் ரசித்திருக்கிறேன்
உன் நினைவுகளோடு மட்டும்..