Tuesday, February 2, 2010

                  மழை
                  


மாலை நேரத்தில் பெய்யும்
மழையை நீ
ரசித்திருக்கலாம்,


உண்ண கொஞ்சம் காரம்
சூடான தே-நீர்
படிக்க நல்ல புத்தகம்
என் நினைவுகள்,
இதில் யெதெனும் ஒன்றுடன்....,


அதிகாலை 3 மணிக்கு
பெய்யும் அடை மழையை
ரசித்திருக்கிறாயா?


காதலியை காமுறும்
காதலன் போல்
வானுக்கும் பூமிக்கும்
இடைவெளி இல்லாது....,


நான் ரசித்திருக்கிறேன்
உன் நினைவுகளோடு மட்டும்..