Saturday, December 18, 2010

இயல்பு
உள்ளத்தை தொலைத்துவிட்டு உன்னை
நீ தேடிக்கொண்டிருக்கிறாய்...
உன்மத்தம் பிடித்த நிலையில்
உயர்ந்து நின்றாய் உனக்குள்...
சிறு புள்ளியாய் தேய்ந்து நிற்கிறாய்
இன்று வேறோரிடத்தில்..
சிறியதாய் வளர்ந்த ஆலமரத்தின்
ஆணி வேரை வெட்டியெரியப்பார்க்கிறாய்...
இயல்பாய் அதனை அதன் போக்கில்வளரவிடு...
உன்னைத்தொலைத்து உனக்கென
வாழ முற்படுகிறாய்..
உன்னை அடிமைப்படுத்தும் யுக்தியை கூட
அன்பென கொண்டாட நினைக்கிறாய்..
உன் இயல்பை ஏற்றுக்கொள்ள
யாராலும் முடியாது..
(யாரையும் யாராலும்தான்)....
சிறு பிள்ளையாய் திரிந்ததால்
சிறுபிள்ளையொடு ஊடல் கொள்கிறாய்
ஆனால் உணர்வோடு வாழ
ஆசை படுகிறாய்.

உன் காமத்தை போல்
கோபம், அழுகை,சிரிப்பு எல்லாம் இயல்பானதே
யாருக்காகவும் உன்னை மாற்ற நினைத்து
மேலும் மூர்க்கமாகிவிடாதே.....

Tuesday, June 22, 2010

ப்ரிய சுவாசம்
மூர்கமாய் முத்தம் இடும் நேரம்
முத்தத்தின் இடைவெளியில்
மூச்சுக்காற்று இடம் மாறுமா...?

மாறி இருக்க கூடும்..
மாறமலா மனசுக்குளேயே இருக்கிறாய்..

உனக்குள் இன்னும் இருக்கிறதா என்பது
எனக்கு தெரியாது..

சுலபமாய் வேற்றுகிரகவாசியாகி
அங்குசுவாசிக்க தொடங்கிவிட்டாய்...

மூர்க்கமாய் முத்தம் இட்டதாய்
இருந்தால் என்ன ..
முள் நீக்கி நீ கொடுத்த மீனாய்
இருந்தால் என்ன..

இரண்டிலும் உன் பிரியம் இருந்தது..

Tuesday, February 2, 2010

                  மழை
                  


மாலை நேரத்தில் பெய்யும்
மழையை நீ
ரசித்திருக்கலாம்,


உண்ண கொஞ்சம் காரம்
சூடான தே-நீர்
படிக்க நல்ல புத்தகம்
என் நினைவுகள்,
இதில் யெதெனும் ஒன்றுடன்....,


அதிகாலை 3 மணிக்கு
பெய்யும் அடை மழையை
ரசித்திருக்கிறாயா?


காதலியை காமுறும்
காதலன் போல்
வானுக்கும் பூமிக்கும்
இடைவெளி இல்லாது....,


நான் ரசித்திருக்கிறேன்
உன் நினைவுகளோடு மட்டும்..