இயல்பு
உள்ளத்தை தொலைத்துவிட்டு உன்னை
நீ தேடிக்கொண்டிருக்கிறாய்...
உன்மத்தம் பிடித்த நிலையில்
உயர்ந்து நின்றாய் உனக்குள்...
சிறு புள்ளியாய் தேய்ந்து நிற்கிறாய்
இன்று வேறோரிடத்தில்..
சிறியதாய் வளர்ந்த ஆலமரத்தின்
ஆணி வேரை வெட்டியெரியப்பார்க்கிறாய்...
இயல்பாய் அதனை அதன் போக்கில்வளரவிடு...
உன்னைத்தொலைத்து உனக்கென
வாழ முற்படுகிறாய்..
உன்னை அடிமைப்படுத்தும் யுக்தியை கூட
அன்பென கொண்டாட நினைக்கிறாய்..
உன் இயல்பை ஏற்றுக்கொள்ள
யாராலும் முடியாது..
(யாரையும் யாராலும்தான்)....
சிறு பிள்ளையாய் திரிந்ததால்
சிறுபிள்ளையொடு ஊடல் கொள்கிறாய்
ஆனால் உணர்வோடு வாழ
ஆசை படுகிறாய்.
உன் காமத்தை போல்
கோபம், அழுகை,சிரிப்பு எல்லாம் இயல்பானதே
யாருக்காகவும் உன்னை மாற்ற நினைத்து
மேலும் மூர்க்கமாகிவிடாதே.....
No comments:
Post a Comment