வலி
மீட்டெடுக்க இயலாத இழப்புகளை
விதைத்துக் கொண்டேயிருக்கிறது
இந்த வாழ்க்கை,
நானும் சலனமில்லாமல் அறுவடை
செய்து கொண்டேயிருக்கிறேன்
அதன் வலிகளை,
வாழ்வினுடான உரையாடல் என்னுள்ளே
நீண்டு கொண்டேயிருக்கிறது
பால்ய நினைவுகளுடன்,
அம்மாவிடம் ஆரம்பித்த காதல்
அப்பாவிடம் எதிர்த்த ஹீரோயிசம்
காதலியிடம் போட்ட சண்டை
நண்பனுக்கு கொடுத்த கடன்
எல்லாம் தோல்வியில் முடிந்தாலும்
வலித்ததேயில்லை,
ஆனால் வலிக்கிறது ..
இழப்புகளின் மீட்பின்மை.
kavitha...kavitha oru kavithaikul...
ReplyDeletepalakavithai...
kannirudan[aananda]
Thenmozhi